29:03:2025 உடல் அடக்கம்
29:03:2025. ஒரே நாளில் ஒரு பிஞ்சு ஆண் சிசு உட்பட மொத்தம் மூன்று ஆதரவற்ற உடல்கள் அடக்கம் செய்து கொடுக்கப்பட்டது. தமிழ்ச்செல்வி வயது 70 சாலை விபத்தில் இறந்துவிட்டார் இவருக்கு உறவினர்கள் யாரும் இல்லாத காரணத்தால் காவல் ஆய்வாளர் அவர்கள் திருமுருகன் பூண்டி காவல் நிலையம் திருப்பூர் மாநகரம் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்களை அறக்கட்டளை நிறுவனர் Sகமருதின் இறந்தவரின் உடலை பெற்று திருப்பூர் ஸ்ரீ சக்தி தியேட்டர் அருகில் உள்ள செல்லாண்டியம்மன் மயானத்தில் காவலர் 871 பூமி ராஜா அவர்கள் முன்னிலையில் நல்லடக்கம் செய்து கொடுக்கப்பட்டது சரண்யா இவருக்கு இறந்த நிலையில் பிறந்த ஆண் குழந்தை அந்த குழந்தையை அடக்கம் செய்ய அவர்களிடம் போதிய வசதி இல்லாத காரணத்தால் மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர் Sகமருதீன் சிசுவின் உடலை பெற்று திருப்பூர் ஸ்ரீ சக்தி தியேட்டர் அருகில் உள்ள செல்லாண்டி அம்மன் மயானத்தில் குழந்தையின் பாட்டி முன்னிலையில் நல்லடக்கம் செய்து கொடுக்கப்பட்டது சித்தோடு காவல் உதவி ஆய்வாளர் அவர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெயர் விலாசம் தெரியாத ஆண் இறந்துவிட்டார் அவரை அடக்கம் செய்ய உறவினர் யாரும் இல்லாத காரணத்தால் மனிதநேய கரங்களை அறக்கட்டளை நிறுவனர்S கமருதின் இறந்தவரின் உடலை பெற்று ஈரோடு கருங்கல்பாளையம் மாநகராட்சி பொது மயானத்தில் Hc 725 செந்தில்குமார் அவர்கள் முன்னிலையில் நல்லடக்கம் செய்து கொடுக்கப்பட்டது என்றும் மனிதநேய சேவையில் மனிதநேய கரங்கள் அறக்கட்டளை மனிதநேய சேவைக்கு தொடர்பு கொள்ள 7293280514 திருப்பூர்