08.01.2025 உடல் அடக்கம்
08.01.2025. ஒரே நாளில் நான்கு ஆதரவற்ற உடல்கள் மனிதநேய கரங்கள் அறக்கட்டளை மூலமாக நல்லடக்கம் செய்து கொடுக்கப்பட்டது வடமாநிலத்தை சார்ந்த சகாதேவ ராய் ரகுலா வயது 54 இறந்துவிட்டார் அவருக்கு உறவினர்கள் யாரும் இல்லாத காரணத்தால் மொடக்குறிச்சி காவல் உதவி ஆய்வாளர் அவர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர் Sகமருதீன் கிருஷ்ணமூர்த்தி Hc 2403 அவர்கள் முன்னிலையில் பள்ளிபாளையம் பேரூராட்சி மயானத்தில் நல்லடக்கம் செய்து கொடுக்கப்பட்டது அதேபோல் சாந்தி வயது 50 குமாரபாளையம் இறந்துவிட்டார் அவரை தகனம் செய்ய மகள் வசம் போதிய வசதி இல்லாத காரணத்தால் மனிதநேய கரங்கள் அறக்கட்டளை மூலமாக சாந்தியின் உடலை பள்ளிபாளையம் பேரூராட்சி பொதுமையானதில் அவருடைய மகள் பிரியா முன்னிலையில் சாந்தியின் உடலை தகனம் செய்து கொடுக்கப்பட்டது அதேபோல் காவல் ஆய்வாளர் அவர்கள் தெற்கு காவல் நிலையம் ஈரோடு மாவட்டம் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி பெயர் விலாசம் தெரியாத சுமார் 80 வயது மதிக்கத்தக்க முதியவர் இறந்து விட்டார் அவருடைய உடலை பள்ளிபாளையம் பேரூராட்சி மயானத்தில் நல்லடக்கம் செய்து கொடுக்கப்பட்டது அதேபோல் உதவி ஆய்வாளர் அவர்கள் அவிநாசி காவல் நிலையம் திருப்பூர் மாவட்டம் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி பெயர் விலாசம் தெரியாத சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஆண் இறந்துவிட்டார் அவரை அடக்கம் செய்ய உறவினர்கள் யாரும் இல்லாத காரணத்தால் மனிதநேய கரங்களை அறக்கட்டளை நிறுவனர்Sகமருதீன் இறந்தவரின் உடலை பெற்று திருப்பூர் ஸ்ரீ சக்தி தியேட்டர் அருகில் உள்ள செல்லாண்டியம்மன் மயானத்தில் நந்தகுமார்Hc 1527 அவர்கள் முன்னிலையில் நல்லடக்கம் செய்து கொடுக்கப்பட்டது என்றும் மனிதநேய சேவையில் மனிதநேய கரங்கள் அறக்கட்டளை மனிதநேய சேவைக்கு தொடர்பு கொள்ள 7293280514